இன்று 26.05.2025 (திங்கட்கிழமை) நமது முகமது இஸ்மாயில் ஐடிஐ வளாகத்தில் முகமது இஸ்மாயில் ஐடிஐ மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் திருநெல்வேலி இணைந்து நடத்திய மாணவர் புத்தக்கா கண்காட்சி நடைபெற்றது. இந்தக் கண்காட்சியை தாளாளர் திரு.நூருதீன்.MA., அவர்கள் (தாளாளர் முகமது இஸ்மாயில் ஐ.டி.ஐ ) தலைமை ஏற்று சிறப்புரை வழங்கினார்கள். மேலும் திரு.M.சிவபாரதி,ME,MBA., மாவட்டத்திட்ட மேலாளர் அவர்கள்( தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்EDII-TN) மற்றும் Dr.S.சுவைதரன் மாவட்டத்திட்ட மேலாளர், தூத்துக்குடி,
R.பலவேசம்
மாவட்டத்திட்ட மேலாளர், EDII-TN, தென்காசி, ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இந்த கண்காட்சியில் 25-க்கும் மேற்பட்ட புதிய கண்டுபிடிப்புகளை மாணவர்கள் காட்சிப்படுத்தியிருந்தார்கள்.இதில் சிறந்த படைப்புகளுக்கு முகமது இஸ்மாயில் ஐடியின் தாளாளர் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மாவட்டத் திட்ட மேலாளர் அவர்களும் இனைந்து (YOUNG SCIENTIST AWARD-2025) பரிசு வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்தினார்கள்.
இறுதியில் முகமது இஸ்மாயில் ஐடிஐ முதல்வர் திரு லாரன்ஸ் ME அவர்கள் நன்றி உரை வழங்கி விழாவை சிறப்பித்தார்கள்.

